Thirukkural

839

பொருட்பால்நட்பியல்பேதைமை

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.

Transliteration:

Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan

Peezhai Tharuvadhon Ril

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)பேதைமைFolly • Pedhaimai

English Translation

Friendship with fools is highly sweet For without a groan we part

Couplet

Friendship of fools is very pleasant thing,Parting with them will leave behind no sting

Explanation

The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

பரிமேலழகர் உரை

பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது

thirukkural.site