Thirukkural

779

பொருட்பால்படையில்படைச் செருக்கு

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

Transliteration:

Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare

Pizhaiththadhu Orukkir Pavar

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)படையில்The Excellence of an Army • Padaiyil
அதிகாரம் (Topic)படைச் செருக்குMilitary Spirit • Pataichcherukku

English Translation

Who will blame the heroes that lose Their lives in war to keep their vows?

Couplet

Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn

Explanation

Who would reproach with failure those who seal their oath with their death ?

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

சாலமன் பாப்பையா உரை

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.

பரிமேலழகர் உரை

இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? (இழைத்தல்

இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை

முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர். இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது. Translation

thirukkural.site