Thirukkural

739

பொருட்பால்அரணியல்நாடு

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.

Transliteration:

Naatenpa Naataa Valaththana Naatalla

Naata Valandharu Naatu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரணியல்The Essentials of a State • Araniyal
அதிகாரம் (Topic)நாடுThe Land • Naatu

English Translation

A land is land which yields unsought Needing hard work the land is nought

Couplet

That is a land that yields increase unsought,That is no land whose gifts with toil are bought

Explanation

The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

பரிமேலழகர் உரை

நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.).

மணக்குடவர் உரை

தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்

thirukkural.site