Thirukkural

637

பொருட்பால்அமைச்சியல்அமைச்சு

செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

Transliteration:

Seyarkai Arindhak Kataiththum Ulakaththu

Iyarkai Arindhu Seyal

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அமைச்சியல்Minister of State • Amaichiyal
அதிகாரம் (Topic)அமைச்சுThe Office of Minister of state • Amaichchu

English Translation

Albeit you know to act from books Act after knowing world's outlooks

Couplet

Though knowing all that books can teach, 'tis truest tactTo follow common sense of men in act

Explanation

Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

பரிமேலழகர் உரை

செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.).

மணக்குடவர் உரை

செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு. Translation

thirukkural.site