Thirukkural

599

பொருட்பால்அரசியல்ஊக்கம் உடைமை

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

஦வ்ருஉம் புலிதாக் குறின்.

Transliteration:

Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai

Veruum Pulidhaak Kurin

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)ஊக்கம் உடைமைEnergy • Ookkamutaimai

English Translation

Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails

Couplet

Huge bulk of elephant with pointed tusk all armed,When tiger threatens shrinks away alarmed

Explanation

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு

சாலமன் பாப்பையா உரை

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

பரிமேலழகர் உரை

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும். (பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.).

மணக்குடவர் உரை

யானை, பெரிய உடம்பினதாய்க் கூரியகோட்டையும் உடைத்தாயினும் புலி பொருமாயின் அஞ்சும். இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது. Translation

thirukkural.site