Thirukkural

565

பொருட்பால்அரசியல்வெருவந்த செய்யாமை

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

Transliteration:

Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam

Peeykan Tannadhu Utaiththu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)வெருவந்த செய்யாமைAbsence of Terrorism • Veruvandhaseyyaamai

English Translation

Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul

Couplet

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;His ample wealth shall waste, blasted by demon's glance

Explanation

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

பரிமேலழகர் உரை

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்

தன் வயமாக்குதல்.).

மணக்குடவர் உரை

காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது. Translation

thirukkural.site