Thirukkural

485

பொருட்பால்அரசியல்காலமறிதல்

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

Transliteration:

Kaalam Karudhi Iruppar Kalangaadhu

Gnaalam Karudhu Pavar

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)காலமறிதல்Knowing the fitting Time • Kaalamaridhal

English Translation

Who want to win the world sublime Wait unruffled biding their time

Couplet

Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait

Explanation

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

பரிமேலழகர் உரை

கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை

கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது

மணக்குடவர் உரை

செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும் அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.

thirukkural.site