Thirukkural

434

பொருட்பால்அரசியல்குற்றங்கடிதல்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.

Transliteration:

Kutrame Kaakka Porulaakak Kutrame

Atran Tharooum Pakai

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)குற்றங்கடிதல்The Correction of Faults • Kutrangatidhal

English Translation

Watch like treasure freedom from fault Our fatal foe is that default

Couplet

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity

Explanation

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

பரிமேலழகர் உரை

அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே, குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும். (இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றம் அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது 'அரும்பண்பினால் தீமை காக்க,' என்பதுபோல நின்றது.).

மணக்குடவர் உரை

தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

முடிவினைத் தருவதாகிய பகை குற்றமேயாகும். ஆதலால் அக்குற்றம் தனக்கு வாராதிருப்பதனையே பயனாகக் கொண்டு காத்தல் வேண்டும்.

thirukkural.site