Thirukkural

427

பொருட்பால்அரசியல்அறிவுடைமை

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

Transliteration:

Arivutaiyaar Aava Tharivaar Arivilaar

Aqdhari Kallaa Thavar

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)அறிவுடைமைThe Possession of Knowledge • Arivutaimai

English Translation

The wise foresee what is to come The unwise lack in that wisdom

Couplet

The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be

Explanation

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

பரிமேலழகர் உரை

அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்

முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது

மணக்குடவர் உரை

பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று. Translation

thirukkural.site