Thirukkural

32

அறத்துப்பால்பாயிரவியல்அறன் வலியுறுத்தல்

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Transliteration:

Araththinooungu Aakkamum Illai Adhanai

Maraththalin Oongillai Ketu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)பாயிரவியல்Prologue • Paayiraviyal
அதிகாரம் (Topic)அறன் வலியுறுத்தல்Assertion of the Strength of Virtue • Aran Valiyuruththal

English Translation

Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain

Couplet

No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws

Explanation

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை

கலைஞர் மு.கருணாநிதி உரை

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

சாலமன் பாப்பையா உரை

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

பரிமேலழகர் உரை

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஆறாம் செய்வதனைவிட மேம்பட்ட செல்வமும் இல்லை; அந்த அறத்தினை அஞ்ஞானத்தால் மறைப்பதை விடப் பெரிய தீமையும் இல்லை.

thirukkural.site