Thirukkural

298

அறத்துப்பால்துறவறவியல்வாய்மை

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

Transliteration:

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai

Vaaimaiyaal Kaanap Patum

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Topic)வாய்மைVeracity • Vaaimai

English Translation

Water makes you pure outward Truth renders you pure inward

Couplet

Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow

Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

பரிமேலழகர் உரை

புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்

அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். - அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். "(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்

மணக்குடவர் உரை

உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவனுக்கு உடம்பு தூய்மையாவது நீராலேயே அமையும். மனம் தூய்மையாக இருப்பதென்பது வாய்மையால் உண்டாகிக் காணப்படும்.

thirukkural.site