Thirukkural

153

அறத்துப்பால்இல்லறவியல்பொறையுடைமை

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

Transliteration:

Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul

Vanmai Matavaarp Porai

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)பொறையுடைமைThe Possession of Patience, Forbearance • Poraiyutaimai

English Translation

Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength

Couplet

The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart

Explanation

To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

சாலமன் பாப்பையா உரை

வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

பரிமேலழகர் உரை

இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.].

மணக்குடவர் உரை

வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவனுக்கு வறுமையுள் மிகவும் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதலாகும். அதுபோல வல்லமையுள் மிகவும் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவர்களை பொறுத்துக்கொள்ளுவதாகும்.

thirukkural.site