Thirukkural

1304

காமத்துப்பால்கற்பியல்புலவி

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

Transliteration:

Ooti Yavarai Unaraamai Vaatiya

Valli Mudhalarin Thatru

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Topic)புலவிPouting • Pulavi

English Translation

To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

Couplet

To use no kind conciliating art when lover grieves,Is cutting out the root of tender winding plant that droops

Explanation

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.).

மணக்குடவர் உரை

நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும்.

thirukkural.site