Thirukkural

124

அறத்துப்பால்இல்லறவியல்அடக்கம் உடைமை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

Transliteration:

Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram

Malaiyinum Maanap Peridhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)அடக்கம் உடைமைThe Possession of Self-restraint • Atakkamutaimai

English Translation

Firmly fixed in self serene The sage looks grander than mountain

Couplet

In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view

Explanation

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

பரிமேலழகர் உரை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை

தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியானது மலையின் உயர்ச்சியினைவிட மிகவும் பெரியதாகும்.

thirukkural.site