Thirukkural

1196

காமத்துப்பால்கற்பியல்தனிப்படர் மிகுதி

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது.

Transliteration:

Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola

Irudhalai Yaanum Inidhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Topic)தனிப்படர் மிகுதிThe Solitary Anguish • Thanippatarmikudhi

English Translation

One sided pains; love in both souls Poises well like shoulder poles

Couplet

Love on one side is bad; like balanced loadBy porter borne, love on both sides is good

Explanation

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.).

மணக்குடவர் உரை

ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

காதலர் இருவரிடமும் இருக்க வேண்டிய காம வேட்கை ஒருவரிடம் மட்டும் உண்டானால் அது துன்பமானதாகும். காவடித் தண்டின் பாரம் போல இரு பக்கமும் ஓத்திருந்தால் அது இனிமையானதாகும்.

thirukkural.site