Thirukkural

1195

காமத்துப்பால்கற்பியல்தனிப்படர் மிகுதி

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.

Transliteration:

Naamkaadhal Kontaar Namakkevan Seypavo

Thaamkaadhal Kollaak Katai

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Topic)தனிப்படர் மிகுதிThe Solitary Anguish • Thanippatarmikudhi

English Translation

What can our lover do us now If he does not requite our love?

Couplet

From him I love to me what gain can be,Unless, as I love him, he loveth me

Explanation

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?.

சாலமன் பாப்பையா உரை

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?.

பரிமேலழகர் உரை

('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.).

மணக்குடவர் உரை

நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

காதலர் தாமும் நம்மிடத்தில் காதல் கொள்ளாமற்போனால் நம்முடைய காதலினைக்கொண்டுள்ள காதலர் நமக்கு என்ன இன்பத்தினைச் செய்து விடுவார்?.

thirukkural.site